‘‘ராகுல் - ராவணன், பிரியங்கா- சூர்ப்பனகை; இலங்கையை ராமர் மோடி வீழ்த்துவார்’’ - பாஜக நிர்வாகி பேச்சால் சர்ச்சை

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ராவணன் என்றும், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவை சூர்ப்பனகை என்றும் விமர்சித்து உ.பி பாஜக எம்எல்ஏ பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனது சகோதரி பிரியங்கா காந்தி வத்ராவை காங்கிரஸின் பொதுச் செயலாளராக கட்சித் தலைவர் ராகுல் காந்தி நியமித்தார். இதன் மூலம் தீவிர அரசியலுக்கு பிரியங்கா வந்துள்ளார். அரசியல் வருகைக்கு பிறகு பிரியங்காவை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

காங்கிரஸைப் பொறுத்தவரை ஓஆர்ஓபி (ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்) என்றால் ஒரே ராகுல், ஒரே பிரியங்கா என்று பாஜக தலைவர் அமித் ஷா சாடினார். இதுமட்டுமின்றி அக்கட்சி நிர்வாகிகள் சிலர் பிரியங்காவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் பைரியா தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் கூறியதாவது:

‘‘அரசியலை பொறுத்தவரை பிரதமர் மோடி தான் ராமர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராவணன், அவரது தங்கை பிரியங்கா சூர்ப்பனகை. ராமருக்கும், ராவணனுக்கும் தற்போது போர் தொடங்கியுள்ளது. ராமருக்கு எதிராக முதலில் சூர்ப்பனகையை தான், அதுபோல ராகுல் காந்தி தனது தங்கை பிரியங்காவை முதலில் அனுப்பியுள்ளார். யாரை அனுப்பினாலும் இந்த போரில் ராவணன் தோற்கப்போவது உறுதி. இலங்கையை வீழ்த்தி ராமர் வெற்றி பெறுவார்’’ என அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

35 mins ago

வலைஞர் பக்கம்

55 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்