ஜேடியூ எம்எல்ஏ கட்சியிலிருந்து விலகல்

By செய்திப்பிரிவு

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் ஜேடியூ, பாஜக கூட்டணி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. ஜேடியூ தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகவும் பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி துணை முதல்வராகவும் பதவி வகிக்கின்றனர்.

இந்நிலையில் ஜேடியூ மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான ஷியாம் பகதூர் பாட்னாவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது.

மணல் கொள்ளையை தடுக்க முயற்சி செய்வோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்கின்றனர். இதுதொடர்பாக அரசிடம் பலமுறை முறையிட்டும் எனது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

எனவே கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்