மிதக்கும் குடிசைகளில் நெசவாலைகள்: மணிப்பூர் ஏரியில் ஒரு வித்தியாசமான முயற்சி

By ஏஎன்ஐ

வடகிழக்கு மாநிலங்களிலேயே முதன்முறையாக வித்தியாசமான ஒரு முயற்சியாக மணிப்பூர் மாநிலத்தில் ''தண்ணீரில் மிதக்கும் கைத்தறி குடிசைகள்'' தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கான விழா இன்று பிஷ்னபூர் அருகிலுள்ள லோக்தாக் ஏரியில் கோலாகலமாக நடைபெற்றது.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 மிதக்கும் குடிசைகளை திரிபுரா மாநில வனம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மேவார் குமார் தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து ஜவுளி மற்றும் கைத்தறி இயக்குநரகத்தின் இயக்குநர் கே.லாம்லி காமேய் தெரிவிக்கையில்,

'' ஏரிகளில் நெசவுலைகளுக்கான குடிசைகள் அமைத்துள்ளோம். இது ஒரு பரிசோதனை முயற்சிதான். மிதக்கும் இக்குடிசைகளில் பெண்கள் ஈடுபடக்கூடிய கைத்தறி நெசவுப்பணிகளை செயல்படுத்தி பார்க்க உள்ளோம்.

இம்முயற்சி வெற்றிபெற்றால் மேலும் பெரிய அளவில் இதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.

சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கவும் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிப்பதும்தான் இச் சோதனை முயற்சிகளுக்கு பின்னால் உள்ள நோக்கங்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

45 mins ago

சினிமா

55 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்