காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்ற என்கவுன்ட்டர் தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராணுவ வீரர்கள், சிஆர்பிஎப் மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய இந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது, ''டிக்கன் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டது. தேடுதல் வேட்டையின்போது தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடங்கினர். பாதுகாப்புப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்த என்கவுன்ட்டர் தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகள் இருவரும் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் தெரியவில்லை. என்கவுன்ட்டர் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்து ஆயுதங்களும் வெடிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன'' என்றனர்.
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
இந்தியா
3 hours ago
வலைஞர் பக்கம்
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
5 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
இந்தியா
6 hours ago
ஜோதிடம்
6 hours ago