சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நேற்று நடந்த மோதலில் 3 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.
தலைநகர் ராய்ப்பூரிலிருந்து சுமார் 500 கி.மீ. தொலைவில் நடந்த இந்த என்கவுன்ட்டரில் நக்சலைட் ஒருவர் கைது செய்யப்பட்டார். சம்பவ இடத்தி லிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டன.
சுக்மா மாவட்டம், முலேர் என்ற கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நக்சலைட்கள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அவர்களை தேடும் பணியில் மாவட்ட ரிசர்வ் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் போலீஸார் - நக்சலைட்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோத லுக்குப் பிறகு அங்கிருந்து 3 நக்சலைட்களின் உடல்கள் மீட்கப் பட்டன. ஒருவர் கைது செய்யப் பட்டார்.
அங்கிருந்து 5 துப்பாக்கி கள், ஒரு குழாய் வெடிகுண்டு மற்றும் அன்றாடத் தேவைக்கான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கொல்லப்பட்ட நக்சலைட்கள் இன்னும் அடையாளம் காணப் படவில்லை. போலீஸார் வனப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் சரணடையும் நக்சலைட்களின் மறுவாழ்வுக்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து உதவி செய்து வருகின்றன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
வணிகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
6 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
க்ரைம்
7 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago