மும்பையில் மாடல் அழகியைக் கொன்று உடலை சூட்கேசில் அடைத்து வீசிய கொடூரம்: கல்லூரி மாணவர் கைது

By பிடிஐ

மாடலிங் தொழிலில் பெரிய கனவுகளுடன் நுழைந்த மான்சி திக்‌ஷித் என்பவரைக் கொலை செய்து உடலை சூட்கேசில் வைத்து வீசிய 19 வயது ஹைதராபாத் நபரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திங்களன்று மும்பை மேற்கு புறநகர்ப்பகுதியான மலாத்தில் சூட்கேசில் மான்சியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

மான்சி திக்‌ஷித் என்ற இந்த இளம் பெண்ணுக்கு வயது 20. இவர் ராஜஸ்தான் கோட்டாவிலிருந்து மும்பைக்கு தன் மாடலிங் துறை கனவுகளை நிறைவெற்றிக்கொள்ள குடிபெயர்ந்தார்.

இந்நிலையில் இவரது ஆண் நண்பரா, காதலரா என்று தெரியாத ஒரு உறவில் 19 வயது கல்லூரி மாணவர் முஸமில் சையத் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது, இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அந்தேரியில் வசித்து வந்தார்.

மான்சி கொலையில் போலீஸார் துப்புத் துலக்கியபோது சையத் சிக்கினார். விசாரணையில் குற்றத்தை சையத் ஒப்புக் கொண்டார், ஆனால் கொலை செய்யும் நோக்கமில்லை, வாக்குவாதம் முற்ற ஸ்டூலால் தாக்கியதில் அவர் இறந்தார் என்று கூறியுள்ளார்.

சம்பவம் நடந்த அன்று மலாத்தில் மான்சியைக் கொன்று அவரது உடலை சூட்கேசில் அடைத்து காரில் கொண்டு சென்றுள்ளார். அங்கு ஒரு இடத்தில் சூட்கேசை வீசி விட்டு ஆட்டோவில் தப்பிச் சென்றுள்ளார், இதனை கார் ஓட்டுநர் கவனிக்க அவருக்கு கடும் சந்தேகம் எழுந்துள்ளது, போலீஸாருக்குத் தகவல் அனுப்பினார். போலீஸார் வந்து சூட்கேசைக் கைப்பற்றி, கொலையை உறுதி செய்ததோடு, சிசிடிவி காமிராப் பதிவுகளையும் கார் ஓட்டுநரின் உதவியுடனும் சையத்தைக் கைது செய்தனர். வழக்கிப் பதிவு செய்து கொலைக்கு வேறு காரணங்கள் உண்டா, பின்னணியில் யார் என்று துருவித் துருவி விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

45 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்