லட்டு பிரியர் வாஜ்பாய்: கடை உரிமையாளர் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நல்ல உணவுகள் மிகவும் பிடிக்கும். சுவையான உணவு வகைகள், இனிப்புகளை விரும்பி சாப்பிடுவார். குறிப்பாக லட்டு என்றால் வாஜ்பாய்க்கு மிகவும் பிரியம். உ.பி. மாநிலம் கான்பூரில் ‘தக்கு கே லட்டு’ என்ற பெயரில் புகழ்பெற்ற லட்டு கடை உள்ளது. ‘‘கான்பூரில் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே இந்த கடைக்கு வந்து லட்டுகளை வாஜ்பாய் விரும்பி சாப்பிடுவார். கான்பூர் வரும் பாஜக தலைவர்கள் வாஜ்பாயை காண செல்லும்போது அவருக்காக எங்கள் கடையில் லட்டுகளை வாங்கிச் செல்வார்கள்’’ என்று கடையின் உரிமையாளர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மேலும்,எந்தெந்த ஊரில் என்னென்ன உணவு வகைகள் சிறப்போ அவற்றையும் வாஜ்பாய் விரும்பி சாப்பிடுவார் என்றும் ஐதராபாத்தில் பிரியாணி, கொல் கத்தாவில் புச்காஸ், லக்னோவில் கெபாப் அவருக்கு பிடித்தமானது என்றும் அவரது உதவியாளர் ஒருவர் தெரிவித்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் முந்திரி, சமோசா ஆகியவற்றை விருப்பமுடன் சாப்பிட்டதாகவும் உதவியாளர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

46 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்