உத்தரப் பிரதேசத்தில் கோசி பகுதியில் 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக மதரஸா பள்ளியின் மேலாளர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் முக்கிய குற்றவாளி ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாகியுள்ள மற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் தெரிவிக்கையில், ‘‘இச்சம்பவம் ஆகஸ்டு 4ஆம் தேதி நடந்தது. மதரஸா மேலாளரின் சகோதரர் மற்றும் 4 பேர் சிறுமியை அறைக்குள் பூட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி, இச்சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்திற்கு போகக்கூடாது என சிறுமியை மிரட்டியுள்ளார். சம்பவம் தொடர்பான சிறுமியின் படங்களைக் காட்டி பிளாக்மெயில் செய்துள்ளார்’’ இவ்வாறு சிறுமியின் தாயார் தெரிவித்தார்.
இதற்கிடையில், மாநில சிறுபான்மைத் துறைத் தலைவர் இவ்வழக்கை தானாக எடுத்துக்கொண்டதோடு, மாவட்ட ஆட்சியரிடமிருந்து ஒரு அறிக்கையும் கோரியுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சைலேந்திர ஸ்ரீவத்சவ் தெரிவிக்கையில், ‘‘மதரஸா மேலாளர் மற்றும் 5 பேர் மீது அளிக்கப்பட்ட புகார் பதிவு செய்துகொள்ளப்பட்டுள்ளது. சிறுமிக்கு தற்போது மருத்துவ பரிசோதனையும் கவனிப்பும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இன்னும் மருத்துவஅறிக்கை வரவில்லை'' என்றார்.
பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான பிரச்சினையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
இந்தியா
28 mins ago
இந்தியா
40 mins ago
இந்தியா
50 mins ago
இந்தியா
58 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
3 hours ago