எல்லைப் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் எல்லையில், சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் சீன ராணுவம் சாலை அமைக்க முயன்றது. இதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர்.
இதனால், ஏற்பட்ட சிறிய மோதலில் இரு தரப்பு நாட்டு ராணுவத்தினரும் படைகளைக் குவித்ததால், பதற்றம் ஏற்பட்டது. அதன் பின், இந்தியா, சீன தூதரக மட்டத்தில் நடந்த சுமுக பேச்சுக்கு பின், இரு நாடுகளும் தங்களின் படைகளை வாபஸ் பெற்றன.
தொடர்ந்து டோக்லாம் எல்லையில் கட்டுமான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளி வந்தன. கடந்த ஜூலை மாதம் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியது. பின்னர் இந்திய வீரர்கள் தொடர்ந்து கொடி அணிவகுப்பு நடத்தியதால் சீன வீரர்கள் திரும்பி சென்றனர்.
இந்நிலையில், சீனா மீண்டும் இந்திய எல்லைப்பகுதிக்குள் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. லடாக்கின் கிழக்குப்பகுதியில் உள்ள டெம்சாக் பகுதியில் 400 மீட்டர் தொலைவுக்கு ஊடுருவிய சீன ராணுவம், 5 டென்ட்களை அமைத்துள்ளது.
அதன்பின்னர் ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து 3 டென்ட்களை சீன ராணுவம் அகற்றியது. மீதமுள்ள இரண்டு டென்ட்டுகளை சீன வீரர்கள் இன்னும் தங்கியிருக்கின்றனர். இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
இந்தியா
4 mins ago
கருத்துப் பேழை
47 mins ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
உலகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago