மத்திய அமைச்சரின் நேர்முக உதவியாளர் தற்கொலை

By செய்திப்பிரிவு

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் தனி உதவியாளர் டெல்லியில்  இன்று காலை தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது:

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் நேர்முக உதவியாளர் குந்தன் குமார் (வயது 31) புதுடெல்லியின் சரோஜினி நகருக்கு அருகில் தனது குடும்பத்தினருடன் அவர் வசித்து வந்தார். அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.25 மணியளவில் தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று அதிகாலை 2.25 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி வந்தது. உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, சப்தர்ஜிங் மருத்துவமனைக்கு கொண்டுசென்றோம். ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

தற்கொலையில் உயிரிழந்த குமாருக்கு ஷிவானி என்கிற மனைவியும், ஆறுவயது மகனும் உள்ளனர். தற்போது அவரது உடல் உடற்கூறு சோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். விசாரணையில் முதற்கட்டமாக அதிகமான புகைப்படங்களை அவர்கள் எடுத்துள்ளார்கள். மேலும் விசாரணை நடைபெறுகிறது.

இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

தமிழகம்

47 mins ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

மேலும்