ஷிகெல்லா பாக்டீரியா தாக்குதல்: 2 வயது குழந்தை கேரளாவில் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

By செய்திப்பிரிவு

கேரளாவில் ஷிகெல்லா பாக்டீரியா தாக்கி 2 வயது குழந்தை நேற்று உயிரிழந்தது. இதனால், கேரளாவில் ஷிகெல்லா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிபா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இந்த நிபா வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் ஒரு செவிலியர் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர், கடுமையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டதை அடுத்து, இந்த நிபா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தங்கள் மாநிலத்தில் நிபா வைரஸ் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கேரள அரசு கடந்த 1-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், கேரளாவில் தற்போது ஷிகெல்லா எனப்படும் உயிர்கொல்லி பாக்டீரியா வேக மாக பரவி வருகிறது. இந்த பாக்டீரியா நோய் தாக்குதலுக்கு ஏற்கெனவே அங்கு 2 பேர் பலி யாகியுள்ளனர். இந்தச் சூழலில், கோழிக்கோடு மாவட்ட அரசு மருத்துவமனையில் இந்நோய் பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வந்த ஜியான் என்ற இரண்டு வயது குழந்தை நேற்று பலியானது. இதனிடையே, இந்த ஷிகெல்லா நோய் தாக்கி மேலும் இரண்டு குழந்தைகள் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்