‘செல்பி’ மோகத்தால் பலியான 2 ஐடி ஊழியர்கள்: நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து உயிரிழந்த சோகம்

By செய்திப்பிரிவு

பெங்களூரில் பணியாற்றி வரும் ஐடி ஊழியர்கள் இருவர் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்து உயிரிழந்தனர்.

கர்நாடகாவில் தற்போது பலத்த மழை பெய்து வருதால் காவிரி மற்றும் துணை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியுள்ளதால் உபரி நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் மேகதாது அருவியிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் பெங்களூரில் உள்ள பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இருபது வயது நிரம்பிய, ஷமீர் ரஹ்மான் மற்றும் பவானி சங்கர் ஆகிய இருவரும், மேகதாது நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றனர்.

அங்கு ஆர்பரித்துக் கொட்டும் நீர்வீழ்ச்சியின் பின்னணியில் ‘செல்பி’ எடுக்க இருவரும் ஆசைப்பட்டனர். நீர்வீழ்ச்சியின் முனையில் நின்று இருவரும் செல்பி எடுத்தபோது தவறி விழுந்தனர். ஆர்பரித்துச் செல்லும் நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

14 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

மேலும்