கடித்துக் குதறிய நாய்; அடித்துக் கொன்ற பொதுமக்கள்

By செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேசத்தில் சித்தாபூர் கிராமத்தில் ஒரு பெண்ணையும் ஆறு வயது சிறுவனையும் கடித்துக் காயப்படுத்திய வெறிநாயை உள்ளூர் மக்கள் அடித்துக் கொன்றனர்.

இதுகுறித்து கோட்வாலி காவல்நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாவது:

நேற்று உஷா (45) என்ற பெண் தனது வீட்டில் இருக்கும்போதே ஒரு வெறிநாய் வீட்டுக்குள் ஓடிவந்து அவரைக் கடித்துக் குதறியுள்ளது. அதன்பின்னர் அருகிலுள்ள இன்னொரு வீட்டுக்குள் சென்றது. அந்த வீட்டுக்குள் நுழைந்து, அங்கிருந்து ஆகாஷ் வயது 6 என்ற சிறுவனையும் கடித்துக் காயப்படுத்தியுள்ளது.

உள்ளூர் மக்கள் அவர்கள் இருவரையும் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். நோடால் கால்நடை சேவை அதிகாரி ஆதித்ய குமார் கூறுகையில், ‘‘வெறிபிடித்ததால் பலரையும் கடித்து காயப்படுத்திய இந்த நாயை பரிசோதித்துப் பார்ப்பதற்காக அதன் இறந்த உடல் போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

நாய்க்கடியில் பலத்த காயமடைந்த இருவருக்கும் உரிய சிகிச்சை மேற்கொள்வதற்காக மாவட்ட பொது மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.

இந்த பகுதியில் உள்ள 22 கிராமங்கள் காட்டு நாய்களின் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இக் காட்டு நாய்களின் கடியால் கடந்த 6 மாதத்தில் (நவம்பர் 2017 முதல்) மட்டும் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட அளவில் 12க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

அருகிலுள்ள மாங்காய் பறிக்கும் சாகசத்திற்காக மாந்தோப்புகளுக்கு ஆர்வமாகச் செல்லும் குழந்தைகளை தனியாக வெளியே அனுப்பவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஏனெனில் பெரும்பாலான நாய்க் கடி தாக்குதல் இங்குதான் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

18 mins ago

இந்தியா

13 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

49 mins ago

சினிமா

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்