மத்தியபிரதேசத்தில் ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் இருப்பதாக காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டை தலைமைத் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. மேலும், அம்மாநிலத்தில் போலி வாக்காளர்கள் இல்லை என்றும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் அங்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வாக்காளர் பட்டியலில் சுமார் 60 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாகவும், மாநில அரசின் உத்தரவின் பேரிலேயே, இந்த முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி அண்மையில் குற்றம்சாட்டியது.
அத்துடன், இந்த விவகாரம் குறித்து டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்திடமும் காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது. இந்தப் புகார் தொடர்பாக விசாரிப்பதற்காக இரண்டு குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்தது.
இந்நிலையில், இந்தக் குழுக்களின் விசாரணை அறிக்கையானது, தேர்தல் ஆணையத்திடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. அதில், வாக்காளர் பட்டியலில் ஒரே புகைப்படத்துடன் கூடிய பல வாக்காளர் விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இது, புகைப்பட அச்சுப் பிழையே தவிர, முறைகேடுகள் ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸின் குற்றச்சாட்டை நிராகரித்து அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
9 mins ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
6 hours ago
இந்தியா
7 hours ago