குஜராத்தில் பள்ளி கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணா மாநிலம் குர்கானிலுள்ள ரயான் சர்வதேச பள்ளியில் படித்த 7 வயது மாணவன் பிரதியூமன் தாக்குர் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளி கழிவறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். பிரதியூமனைக் கொலை செய்தது அந்த பள்ளியில் பணிபுரியும் பேருந்து நடத்துநர் என்று குர்வாவ்ன் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள பள்ளியிலும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள பாரதி வித்யாலயா பள்ளி கழிவறையில் 9ம் வகுப்பு மாணவன் ஒருவர் கொடூரமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்தார். முற்பகலில் அங்கு சென்று பார்த்த பள்ளி ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த மாணவரின் உடல் அருகே ரத்தம் தோய்ந்த கத்தியும் இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சில நாட்களுக்கு முன், பள்ளியில் மாணவர்களிடையே மோதல் நடந்ததாகவும் முதல்கட்ட தகவலில் தெரிகிறது. மாணவர் கொல்லப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
31 mins ago
சினிமா
36 mins ago
இந்தியா
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago