பிஹார் மாநிலத்தில் ஓடும் ரயிலில் ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பயணிகளில் இருவர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து கிழக்கு மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி அர்விந்த் குமார் ரஜக் கூறியதாவது:
கோரக்பூர்-ஹதியா மவுரியா எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை நள்ளிரவு பிஹார் மாநிலம் ஹதிடா ரயில் நிலையத்துக்கு வந்துள்ளது. அப்போது ஒரு பெட்டிக்குள் ஏறிய ஆயுதம் ஏந்திய 6 பேர், துப்பாக்கியை காட்டி பயணிகளிடம் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.
அப்போது பொருட்களை கொடுக்க மறுத்தவர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் 2 பயணிகள் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். பின்னர் அவர்கள் ராம்புர் தும்ரா ரயில் நிலையத்தில் குதித்து தப்பி ஓடிவிட்டதாக பயணிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
சினிமா
4 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
சினிமா
9 hours ago
இந்தியா
10 hours ago