மேற்கு டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள பார் ஒன்றில் உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் ஒருவர், பாடலை மாற்றும் சர்ச்சையில், கொலை செய்யப் பட்டிருப்பது பரபரப்பாகியுள்ளது
ஞாயிறு இரவு நடந்த இந்தச் சம்பவத்தின் போது ஜிம் உரிமையாளர் விஜய்பால் சிங் தன் நண்பரின் பிறந்த தினக் கொண்டாட்டஞ்க்களுக்காக ரஃப்தார் பாருக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு பாடல்கள் ஒலிபரப்பப் பட்டுக் கொண்டிருந்தது. அப்போது தனக்குப் பிடித்தப் பாடலைப் போடச்சொல்லி ஜிம் உரிமையாளர் விஜய்பால் சிங் வற்புறுத்தினார், இதனால் பாடல் போடும் பணியிலிருப்பவர், பாதுகாப்புக் காவலர்கள் மற்றும் விஜய்பால் சிங் ஆகியோருக்குமிடையே வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறியது.
அப்போது யாரோ ஒருவர் ஜிம் உரிமையாளர் விஜய்பால் சிங் மீது கனத்தப் பொருளால் தாக்கினார். இதில் தலையில் கடும் காயமடைந்த அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சண்டையில் குறுக்கே வந்த பெண் ஒருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர். பாடலை ஒலிபரப்பும் பணியிலிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
சுற்றுச்சூழல்
14 mins ago
இந்தியா
17 mins ago
இந்தியா
24 mins ago
இந்தியா
9 mins ago
விளையாட்டு
30 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago