ஜம்மு - காஷ்மீரில் கடும் துப்பாக்கிச் சண்டை: தீவிரவாதி ஒருவர் பலி

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர் அருகே மத்திய ரிசர்வ் படை போலீஸாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இதில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே, சத்பால் பகுதியில் இன்று அதிகாலை மத்திர ரிசர்வ் படை போலீஸார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது தீவிரவாதிகள் அவர்களை வழிமறித்து தாக்கினர்.

இதையடுத்து இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய ரிசர்வ் படை போலீஸார் இருவர் காயமடைந்தனர். தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் கைபற்றப்பட்டுள்ளன.

இதனிடையே, நேற்று பந்திபோரா அருகே ஷாஹாகுந்த் பகுதியில் வீடு ஒன்றுக்குள் அதிரடியாக நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை தாக்கினர். அந்த வீட்டில் இருந்த குலாம் ஹசன், பஷீர் அகமத் ஆகிய இருவரையும் கடத்தி சென்றனர்.

இன்று காலை அவர்கள் இருவரின் டலும் இன்று காலை சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. இருவரையும் தீவிரவாதிகள் கொடூரமான முறையில் தாக்கி கொன்றுள்ளனர். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் லஷ்கர்- இ- தோய்பா தீவிரவாதிகள் என தெரிய வந்துள்ளது.

காஷ்மீரில் தீவிரவாதிகள் அதிக்கம் உள்ள பகுதியில் வீடுகளில் புகுந்து தாக்குதல் நடந்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பாராமுல்லாவில் சந்தை பகுதியில் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த இளைஞர்கள் மூவரை சுட்டுக் கொன்றனர். இதுபோலவே, சோபோரியிலும் தீவிரவாதிகள் வீடு ஒன்றில் புகுந்து அங்கிரு்த தம்பதியரை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

56 mins ago

கருத்துப் பேழை

52 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

36 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

14 mins ago

மேலும்