நாடு முழுவதும் குடிசைப்பகுதி களில் வசிப்போரின் மக்கள் தொகை 2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 1 கோடியே 31 லட்சம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு எழுத்துபூர்வ மாக அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: 2001-ம் ஆண்டு குடிசைப்பகுதிகளில் வசிப்போரின் எண்ணிக்கை 5,23,71,589 ஆக இருந்தது. இது, 2011-ம் ஆண்டு 6,54,94,604 ஆக அதிகரித்தது. 2001-ம் ஆண்டு குடிசைப்பகுதிகள் அதிகமுள்ள நகரங்களின் எண்ணிக்கை 1,743 ஆக இருந்தது. இது, 2011-ம் ஆண்டு 2,613 ஆக அதிகரித்தது.
குடிசைப்பகுதிகளில் வசிப் போரின் எண்ணிக்கை மகாராஷ் டிரா மாநிலத்தில் மிக அதிக அளவில் உள்ளது. இங்குள்ள குடிசைப்பகுதிகளில் 1 கோடியே 18 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்.
முந்தைய ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்தில் 1 கோடியே 1 லட்சம் பேரும், மேற்கு வங்கத்தில் 64 லட்சம் பேரும், உத்தரப் பிரதேசத்தில் 62 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 58 லட்சம் பேரும் குடிசைப்பகுதிகளில் வசிக்கின்றனர்.
மத்தியப் பிரதேசம் - 57 லட்சம் பேர், கர்நாடகா - 33 லட்சம், ராஜஸ்தான் - 21 லட்சம், சத்தீஸ்கர் - 19 லட்சம், டெல்லி - 18 லட்சம், குஜராத் - 17 லட்சம், ஹரியாணா - 16 லட்சம், ஒடிஸா - 15.60 லட்சம், பஞ்சாப் 14.60 லட்சம், ஜம்மு காஷ்மீர் 6.60 லட்சம் பேர் குடிசைப்பகுதிகளில் வசிக்கின்றனர்.
அதே 2001 2011 கால கட்டத் தில் குஜராத் மாநிலத்தில் குடிசைப் பகுதிகளில் வசிப்போரின் மக்கள்தொகையில் 2 லட்சத்து 95 ஆயிரம் பேர் குறைந்துள்ளனர். டெல்லியில் 2.40 லட்சம் பேர், மகாராஷ்டிராவில் 1.27 லட்சம் பேர், பஞ்சாபில் 23 ஆயிரம் பேர், ஹரியாணாவில் 18 ஆயிரம் பேர், சண்டிகரில் 11 ஆயிரம் பேர் குறைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
28 mins ago
இந்தியா
37 mins ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
2 hours ago