ஹரியாணாவில் 9 வயது சிறுமியின் உடல், கை துண்டான நிலையில் சாக்குப் பையில் கண்டெடுப்பு

By ஏஎன்ஐ

 

ஹரியாணா மாநிலம், ரோடக் நகரில் 9 வயது சிறுமியின் உடல் சாக்குப்பையில் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஓடையில் கண்டெடுக்கப்பட்டது. அந்தச் சிறுமியின் ஒரு கை துண்டிக்கப்பட்டது இருந்தது, சிறுமி இறந்து 5 நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

காஷ்மீரில் 8 வயது சிறுமி கொல்லப்பட்ட சோகம் மறைவதற்குள் குஜராத்தின் சூரத் நகரில் 86 காயங்களுடன் 11 வயது சிறுமி உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக ஹரியாணா ரோடக்கில் 9 வயது சிறுமியின் உடல் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரோடக் நகர போலீஸ் அதிகாரி தேவி சிங் நிருபர்களிடம் இன்று கூறியதாவது:

''ரோடக் நகரின் புறநகரான தித்தோத் பகுதியில் உள்ள ஒரு ஓடையில் ஒரு சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வருவதாக மக்கள் எங்களுக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரின் அங்கு சென்று அந்தச் சாக்கு மூட்டையைத் தூக்கி, பிரித்தபோது, அதில் 9 வயது மதிக்கத்தக்கச் சிறுமியின் உடல் அதில் இருந்தது.

இந்தச் சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதால், கொல்லப்பட்டு, சாக்குப்பையில் தூக்கி வீசப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மேலும் சிறுமியின் ஒரு கையும் துண்டிக்கப்பட்டுள்ளது. சிறுமி இறந்து குறைந்தபட்சம் 5 நாட்கள் ஆகியிருக்கும்.

இந்தச் சிறுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி இருக்கிறோம். அந்த அறிக்கை வந்தபின் அந்தச் சிறுமிக்கு என்ன நடந்தது என்பது குறித்துக்கூற முடியும்.''

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

10 mins ago

இந்தியா

13 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

5 mins ago

விளையாட்டு

26 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்