உத்தரபிரதேசத்தில் பலாத்கார புகாரின் அடிப்படையில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரை அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர். செங்கரும், அவரது சகோதரர் அனில் சிங்கும் தன்னை பலாத்காரம் செய்ததாக 17 வயது இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனால் பெண்ணின் தந்தை பப்புவை குல்தீப் சிங்கும் அனில் சிங்கும் தாக்கியதாகத் தெரிகிறது. ஆனால் அங்கு வந்த போலீஸார், பப்புவை கைது செய்தனர்.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம மான முறையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எம்எல்ஏ குல்தீப்பை கைது செய்யக் கோரி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன.
இந்தப் பின்னணியில், பலாத்கார வழக்கு தொடர்பாக, எம்எல்ஏ குல்தீப்பின் சகோதரர் அனில் சிங்கை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். எம்எல்ஏ குல்தீப் சிங் மீதும் போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்தனர். பெண் அளித்த பலாத்கார புகார், அவரது தந்தை மர்ம மரணம் தொடர்பான வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குல்தீப் சிங்கை, சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
சினிமா
11 hours ago
இந்தியா
12 hours ago