நர்மதா நதி பாதுகாப்பு குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 5 சாமியார்களுக்கு இணை அமைச்சர் அந்தஸ்து அளித்து மத்தியப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. நர்மதா நதியை பாதுகாப்பது, நதி மாசுபடுவதை தடுப்பது, நர்மதா நதி அருகே காடு வளர்ப்பு ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.
இந்தக் குழுவில் உறுப்பினர்களாக பாபா நர்மதானந்த், பாபா ஹரிஹரானந்த், கம்ப்யூட்டர் பாபா, பாயு மகராஜ், பண்டிட் யோகேந்திர மகந்த் ஆகிய 5 சாமியார்கள் கடந்த 31-ம் தேதி நியமிக்கப்பட்டனர். இந்த 5 சாமியார்களுக்கும் இணை அமைச்சர் அந்தஸ்து அளித்து மத்திய பிரதேச மாநில அரசு நேற்று உத்தர விட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், நர்மதா நதி திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாகவும் இதை எதிர்த்து தீவிர பிரசாரம் செய்யப் போவதாகவும் கம்ப்யூட்டர் பாபாவும் யோகேந்திர மகந்தும் ஏற்கெனவே அறிவித்தனர். ஆனால், மாநில அரசு அமைச்சர் அந்தஸ்து பதவி அளிக்கப்பட்டதையடுத்து போராட்டத்தை அவர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
16 mins ago
ஓடிடி களம்
17 mins ago
இந்தியா
26 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago