சாலை விபத்தில் சிஆர்பிஎப் காவலர் பலி: 2 மகன்களுக்கு ரூ.1.25 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

By செய்திப்பிரிவு

விபத்தில் சிஆர்பிஎப் காவலர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகளுடன் இறந்த சம்பவத்தில், காவலரின் 2 மகன்களுக்கு ரூ.1.25 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜ்குமார் என்ற சிஆர்பிஎப் காவலர் ஒருவர் கடந்த 2016, டிசம்பர் 13-ம் தேதி உ.பி.யின் அலிகர் நகரில் இருந்து டெல்லிக்கு தனது மனைவி சீமா, மகள் ரீத்து (9) ஆகியோருடன் மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தென்கிழக்கு டெல்லியில் காலிந்தி குஞ்ச் அருகே இவர்களின் பைக் மீது பின்னால் வேகமாக வந்த லாரி மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ராஜ்குமாருக்கு அப்போது 7 மற்றும் 4 வயதில் இரண்டு மகன்கள் இருந்தனர். விபத்தின் போது அலிகரில் ராஜ்குமாரின் பெற்றோரிடம் இவர்கள் இருந்தனர்.

இந்த வழக்கை டெல்லியில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் விசாரித்தது வந்தது. இந்நிலையில் ராஜ்குமாரின் பெற்றோர் மற்றும் 2 மகன்களுக்கு ரூ.1.25 கோடி இழப்பீடு வழங்க நேற்று உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

37 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்