முகநூல் நட்பால் மும்பையில் விபரீதம்: இளம்பெண்ணை ஷூ லேசால் இறுக்கி கொலை செய்த வாலிபர் கைது

By செய்திப்பிரிவு

முகநூலில் நட்பான இளம்பெண் தமது ஆசைக்கு இணங்க மறுத்ததால், அவரை ஷூ லேசால் கழுத்தை இறுக்கி கொலை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் வஷி நகரைச் சேர்ந்தவர் அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 22 வயதான இவர், தனது கல்லூரிப் படிப்பை அண்மையில்தான் நிறைவு செய்தார். அனிதாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகநூலில் நலஸ்போரா பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ் (25) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் மணிக்கணக்கில் முகநூல் வாயிலாக பேசிக் கொண்டதால் அவர்களுக்கு இடையே நெருக்கம் அதிகரித் தது.

இந்நிலையில், ஒருவரையொருவர் நேரில் சந்திப்பது என இருவரும் முடிவு செய்தனர். அதன்படி, ஹரிதாஸின் வீட்டுக்கு அனிதா நேற்று காலை சென்றார். நீண்டநேர உரையாடலுக்குப் பின்னர், அனிதாவிடம் தவறாக நடக்க ஹரிதாஸ் முயன்றுள்ளார். இதற்கு அனிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. ஒருகட்டத்தில், ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற ஹரிதாஸ், தனது ஷு லேசால் அனிதாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர், அவரது உடலை மாடிப்படிகளுக்கு கீழே கிடத்திவிட்டு அவர் வெளியேறினார்.

தகவலறிந்த போலீஸார், அனிதாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அவரது மொபைல் போனை சோதனையிட்டபோது, அவர் ஹரிதாஸிடம் பேசியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாகியிருந்த ஹரிதாஸை போலீஸார் ஒரு மணிநேரத்தில் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

48 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்