ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் குருவங்கா கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி (73). இவரும் ஸ்ரீகாகுளம் மாவட்டம் வீரகட்டம் பகுதியை சேர்ந்த போலம்மாள் (67). இந்த இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கடந்த 58 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்தனர்.
இவர்களுக்கு நான்கு மகன்கள். இவர்கள் அனைவருக்கும் திருமணங்கள் நடந்து, பிள்ளைகளும் பிறந்து பெரியவர்களாயினர். பேரன், பேத்திகள் கூட பெரியவர்களாகி விட்ட நிலையில், சம்பிரதாய முறைப்படி தான் திருமணம் செய்து கொள்ளவில்லையே என்கிற கவலை ராமசாமிக்கு இருந்தது.
இதனை அறிந்த மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரன், பேத்திகள், ராமசாமிக்கும் போலம்மாளுக்கும் முறைப் படி திருமணம் செய்வதென முடிவு செய்தனர். உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் திருமணத்திற்கு அழைத் தனர். இவர்களது திருமணம் தோட்ட பல்லி என்கிற கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில் எளிமையாக நடந்தது.
மணக்கோலத்தில் ராமசாமி, போலம்மாள்
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
9 mins ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
6 hours ago
இந்தியா
7 hours ago