செல்ஃபி எடுத்ததால் ஆத்திரம்; மொபைல் போனை தட்டி விட்ட கர்நாடக அமைச்சர்: வைரலாகும் வீடியோ

By செய்திப்பிரிவு

கர்நாடகாவில் செல்ஃபி எடுக்க முயன்றவரின் செல்போனை அமைச்சர் சிவகுமார் தட்டிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகாவில் மின்துறை அமைச்சராக இருப்பவர் டி.கே.சிவகுமார். கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, கட்சித் தொண்டர் ஒருவர் அவருடன் சேர்ந்து மொபைல் போன் மூலம் செல்ஃபி எடுக்க முயன்றார். அதனால் கோபமடைந்த அமைச்சர் சிவகுமார் அவரை ஆவேசத்துடன் தள்ளினார். இந்த சம்பவம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பெல்லாரியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க ஒருவர் முற்பட்டார். இதனால் கோபமடைந்த அமைச்சர் சிவகுமார் அவரது செல்போனை தட்டிவிட்டார். இந்தக் காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆனால் இதுகுறித்து இன்று விளக்கம் அளித்துள்ள அமைச்சர் சிவகுமார், இது சாதாரண சம்பவம் எனக்கூறியுள்ளார். ''எனது அனுமதியின்றி நான் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது இதுபோன்று செல்ஃபி எடுப்பது தவறான செயல். அதனால் தான் மொபைல் போனை தட்டிவிட்டேன்'' என விளக்கமளித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

14 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

மேலும்