முன்னாள் மத்திய அமைச்சர் ரகுநாத் ஜா காலமானார்

By செய்திப்பிரிவு

ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரகுநாத் ஜா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 78.

பிஹாரின் ஷியோகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரகுநாத் ஜா, கோபால் கஞ்ச், பேட்டியா மக்களவைத் தொகுதிகளிலிருந்து நாடாளுமன்றத்துக்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் மத்திய கனரகத் தொழிற்சாலைகள் துறை இணையமைச்சராக அவர் பணியாற்றினார்.

தமது சொந்த மாவட்டமான ஷியோகர் தொகுதியிலிருந்து பிஹார் சட்டப்பேரவைக்கு ஆறு முறை எம்எல்ஏ-வாக ரகுநாத் ஜா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

தீவிர அரசியலில் இருந்து சமீபகாலமாக விலகியிருந்த அவர், டெல்லியில் உள்ள தமது மகளின் வீட்டில் வசித்து வந்தார். சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் நள்ளிரவு அவரது உயிர் பிரிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

விளையாட்டு

41 mins ago

தமிழகம்

41 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

உலகம்

2 hours ago

மேலும்