உ.பி. லக்னோ - ஆக்ரா நெடுஞ்சாலையில் பனியால் வாகனங்கள் மோதி விபத்து: 12 பேர் காயம்

By பிடிஐ

உத்தரப் பிரதேசத்தின் லக்னோ - ஆக்ரா நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை காலையில் ஏற்பட்ட அடர்ந்த பனியால் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து கூடுதல் கண்காணிப்பாளர் அம்ப்ரிஷ் பதாரியா கூறும்போது, ''உத்தரப் பிரதேசத்தின் உனா நகரில் அடர் மூடுபனியால் சாலையில் வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தால் ஏராளமான வாகனங்கள் சாலையில் ஸ்தம்பித்து நின்றன. இந்த சம்பவம் லக்னோ - ஆக்ரா நெடுஞ்சாலையில் உனா மாவட்டத்தின் ஜோகிகோட் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் அருகிலுள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

11 mins ago

சினிமா

14 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

12 mins ago

சினிமா

30 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

24 mins ago

சினிமா

35 mins ago

சினிமா

38 mins ago

வலைஞர் பக்கம்

42 mins ago

சினிமா

47 mins ago

மேலும்