தமிழகத்தில் குரூப் - 1 அதிகாரிகள் 83 பேர் தேர்வு செய்யப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2005-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் -1 தேர்வு நடத்தியது. போலீஸ் டிஎஸ்பி, துணை ஆட்சியர், வணிக வரித்துறை அதிகாரி, கூட்டுறவு துணைப் பதிவாளர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய 91 காலியிடங்களுக்கு இத்தேர்வு நடந்தது. இதில் 83 பேர் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டனர்.
இந்நிலையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்ட முறையை எதிர்த்து, தேர்ச்சி பெறாதவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த மனுக்களை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி 2009-ம் ஆண்டில் தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. “இத்தேர்வு முறையில் முறைகேடு நடந்துள்ளது. விண்ணப்ப நிபந்தனைகளை தேர்ச்சி பெற்றவர்கள் மீறியுள்ளதால் அவர்களது தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று மனுதாரர்கள் கோரினர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எலிபி தர்மாராவ், ஹரிபரந்தாமன் ஆகியோர் கொண்ட அமர்வு, 83 பேர் குரூப்– 1 அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே, தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்பட்டு பல்வேறு பணிகளில் அமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டு, தமிழக அரசின் முக்கியப் பதவிகளில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அனித் தவே, விக்ரம்ஜித் சென் ஆகியோர், குரூப் – 1 அதிகாரிகள் 83 பேர் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியே என்று திங்கள்கிழமை தீர்ப்பளித்தனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
1 min ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
3 hours ago
வலைஞர் பக்கம்
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
இந்தியா
6 hours ago