சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது இன்று அதிகாலை ஆந்திர அரசு சொகுசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ் ஓட்டுநர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர்.
விஜயவாடாவிலிருந்து நேற்று இரவு 36 பயணிகளுடன் ஆந்திர அரசுக்கு சொந்தமான சொகுசு பஸ் ஹைதராபாத்திற்கு புறப்பட்டு சென்றது. அப்போது இன்று அதிகாலை 3 மணியளவில் தெலங்கானா மாநிலம், சூரியாபேட்டை மாவட்டத்தில் பஸ் வேகமாக சென்றபோது, மொத்தல செருவு எனும் இடத்தில், பழுதாகி சாலை ஓரத்தில் ஒரு லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அந்த லாரி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ் ஓட்டுநர் உட்பட 5 பயணிகள் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்ததும் சூரியாபேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை கோதாடு, சூரியாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 mins ago
க்ரைம்
51 mins ago
உலகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வேலை வாய்ப்பு
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
4 hours ago