ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
எல்லையில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி, இந்தியப் படையினருக்கு ஆத்திரமூட்டும் வகையில் பாகிஸ்தான் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியப் பகுதிக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ துணைபுரியும் வகையிலும் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அச்சுறுத்தி வெளியேற்றும் நோக்கத்துடனும் பாகிஸ்தான் இந்தத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பூஞ்ச் மாவட்டம், கிருஷ்ணகாட்டி செக்டார் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்று காலை 10.35 மணிக்கு தாக்குதல் நடத்தத் தொடங்கினர். பாகிஸ்தானின் கண்மூடித்தனமான இந்தத் தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவரும், சிவிலியன் போர்ட்டர் ஒருவரும் உயிரிழந்ததாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.
கடந்த 6-ம் தேதி ரஜவுரி மாவட்டத்தின் பாபா கோரி மற்றும் பிற பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் இதுபோல் தாக்குதல் நடத்தினர். கடந்த 4-ம் தேதி, பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் காயம் அடைந்தனர். இதே மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 2-ம் தேதி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவரும் 2 சிறார்களும் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயம் அடைந்தனர்.
எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்துவது இந்த ஆண்டு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.- பிடிஐ
முக்கிய செய்திகள்
வணிகம்
13 mins ago
தமிழகம்
59 mins ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
3 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
4 hours ago