ஜிஜேஎம் ஆதரவாளர்களுக்கும் மேற்கு வங்க காவல்துறைக்கும் ஏற்பட்ட மோதலில் உருவான வன்முறையால் டார்ஜிலிங்கில் வெள்ளிக்கிழமை அன்று காவலதிகாரிஒருவர் கொல்லப்பட்டார்.
கூர்க்கா ஜன்முக்தி மோச்சா தலைவர் பிமல் குருங்கைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த அமிதாப் முல்லிக் என்ற காவலதிகாரி இந்த வன்முறையில் குண்டுகள் பட்டு உயிரிழந்தார்.
இரு தரப்பினருக்கும் தொடர்ந்த சண்டையில் ஜிஜேஎம் ஆதரவாளர்களும் மேற்கு வங்க காவல்துறையினரும் காயங்களால் பாதிக்கப்பட்டனர்.
100 நாட்களுக்கும் மேலாக நடந்த முழு அடைப்புப் போராட்டத்துக்குப் பிறகு இத்தகைய பெரிய வன்முறை சம்பவம் நடந்துள்ள்ளது.
போராட்டத்தின் பின்னணி
மேற்குவங்க மாநிலத்தில் மலைப் பகுதியான டார்ஜிலிங், கலிம்போங் மற்றும் குர்சியாங் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய பகுதியை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) அமைப்பினர் கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினர்.
இந்தச் சூழலில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வங்கமொழி கட்டாயமாக்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த ஜிஜேஎம் அமைப்பினர் மாநில அரசைக் கண்டித்தும், மீண்டும் தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தியும் போராட்டங்களில் ஈடுபட்டனர். எனினும் அவர்களது கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. இதையடுத்து ஜூன் 12-ம் தேதி முதல் காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டத்தை ஜிஜேஎம் நடத்தியது.
104 நாட்கள் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்தின் பேச்சுக்குப் பிறகு செப்டம்பர் 27-ம் தேதி முடிவுக்கு வந்தது. எனினும் காவல்துறையினர் ஜிஜேஎம் தலைவர் பிமல் குருங்கைக் கைது செய்ய முயற்சித்ததால் பதற்றம் நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
4 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago