பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன, இதில் காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜக்கார் 1,08,230 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார், இவரை எதிர்த்து நின்ற பாஜக வேட்பாளர் ஸ்வரண் சலாரியாவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஆளும் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து கூறும்போது, “எங்கள் எதிர்காலக் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு சிகப்பு ரிப்பனில் சுற்றப்பட்ட அழகான பரிசுப்பொருள் இந்த வெற்றி. ஏனெனில் இது எதிர்கால நிகழ்வுகளை முடிவு செய்யப்போகிறது.
இது ஷிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பீர் பாதல் மற்றும் பிக்ரம் சிங் மஜீதியா ஆகியோர் முகத்தில் அறைந்த வெற்றியாகும், இன்று பாஜக நிச்சயம் அகாலிதளம் பஞ்சாபில் மிகப்பெரிய சுமை என்பதை உணரும். தொடர்ந்து மக்கள் இவர்களை எச்சரித்து வந்தனர்” என்றார் சித்து.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
க்ரைம்
26 mins ago
இந்தியா
36 mins ago
விளையாட்டு
25 mins ago
இந்தியா
41 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
தொழில்நுட்பம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
சினிமா
10 hours ago
தமிழகம்
11 hours ago