கிடா வெட்டி விருந்து வைக்கும் எம்எல்ஏக்கள்

By இ.ஜெகநாதன்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், தங்களுக்கே மீண்டும் சீட் ஒதுக்கி வெற்றி பெற வைக்க வேண்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏக்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களுக்கு கிடா வெட்டி விருந்து வைக்கின்றனர்.

மானாமதுரை அதிமுக எம்எல்ஏ நாகராஜன் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர். இவர் தனக்கு இந்த முறையும் சீட் கிடைக்கச் செய்து, வெற்றிபெற வைக்க வேண்டி, இஷ்ட தெய்வமான திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மனுக்கு கடந்த வாரம்கிடா வெட்டி விருந்து வைத்தார். இதில் அதிமுகவினர் பங்கேற்றனர். திருப்பத்தூர் திமுக எம்எல்ஏ கே.ஆர்.பெரியகருப்பன் தொடர்ந்து மூன்று முறை வென்றுள்ளார். இந்த முறையும் அவருக்கே திருப்பத்தூர் தொகுதி ஒதுக்கப்பட உள்ளது. தன்னை4-வது முறையாக வெற்றி பெற வைக்க வேண்டி சிங்கம்புணரி அருகே பிரான்மலை அடிவாரத்தில் உள்ள கருப்பர், மலையான் சுவாமிகளுக்கு கிடா வெட்டி தனது கட்சியினருக்கு விருந்து கொடுத்தார். இதன் மூலம் எம்எல்ஏக்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றியதோடு, கட்சியினரையும் குஷிப்படுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்