சென்னையை சேர்ந்தவர் பிரதீப். கால் டாக்ஸி நிறுவனம் நடத்திவரும் இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இணைந்த இளைஞர்களைக் கொண்டு, தமிழ்நாடு இளைஞர் கட்சியை தொடங்கினார். கட்சி பதிவு செய்யப்படாத நிலையில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பில் வேட்பாளரையும் நிறுத்தினார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் தேர்தல் ஆணையத்தில் அந்த கட்சி பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளிலும் போட்டியிட இக்கட்சி முடிவு செய்தது. பொது சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் 2 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்தது. பின்னர், அந்தக் கட்சியின் விருப்பத்தின்பேரில் மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால்தான், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டும், அவர் ஏற்கெனவே போட்டியிட்ட மோதிரம் சின்னம் அவருக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கட்சி சார்பில் முதல்கட்டமாக 24 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாநில பொதுச் செயலாளர் காமேஷ் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
இந்தியா
30 mins ago
இந்தியா
48 mins ago
இந்தியா
57 mins ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago