காங்கிரஸ் - பாஜக இடையே மறைமுக உடன்பாடு: கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரம், ராபர்ட் வதேரா சர்ச்சையை மேற்கோள் காட்டிய ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், காங்கிரஸும் பாஜகவும் மறைமுக உடன்பாடு கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.

வாரணாசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடும் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று செய்தியாளர்களிடம் பேசியது:

"மோடி போட்டியிடும் தொகுதியில் சோனியாவும், சோனியா போட்டியிடும் தொகுதியில் மோடியும் பிரச்சாரம் மேற்கொள்ளாதது ஏன்?

ராபர்ட் வதேரா நில பேர விவகாரத்தில் நரேந்திர மோடி தனது நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். உண்மையிலேயே இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு அக்கறை இருந்தால், ராஜஸ்தானில் ஆளும் பாஜக அரசு, வதேராவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?

அதேபோல், பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் மற்றும் அதானி விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக கேள்வி எழுப்பி வரும் காங்கிரஸ், அது குறித்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகளில் அழுத்தம் தராதது ஏன்?

பாஜகவும் காங்கிரஸும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்கிறார்களே தவிர, எவ்வித நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. இதில் இருந்தே அவர்கள் கைகோத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இரு கட்சிகளுக்கும் இடையே மறைமுக உடன்பாடு உள்ளது.

டெல்லியில் ஷீலா தீட்சித், முகேஷ் அம்பானிக்கு எதிராக என்னால் வழக்குத் தொடர முடிந்தது. அப்படியிருக்க, கடந்த 4 மாதங்களாக வதேராவுக்கு எதிராக ராஜஸ்தானின் பாஜக அரசால் வழக்குப் பதிவு செய்ய முடியாதது ஏன்?

வாரணாசியில் குண்டர்கள் மூலம் மக்களையும் ஆம் ஆத்மி தொண்டர்களையும் அச்சுறுத்தும் முயற்சிகள் நடக்கின்றன" என்றார் அரவிந்த் கேஜ்ரிவால்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

7 mins ago

சினிமா

10 mins ago

வலைஞர் பக்கம்

14 mins ago

சினிமா

19 mins ago

சினிமா

24 mins ago

இந்தியா

32 mins ago

க்ரைம்

29 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்