காலாண்டு விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: காலாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில்1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் கடந்த செப்டம்பர் 21 முதல் 30-ம்தேதி வரை நடத்தப்பட்டன. தொடர்ந்து மாணவர்களுக்கு அக்டோபர் 1-ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம்வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 10-ம் தேதியும்,1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 13-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தசில தனியார் பள்ளிகள் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான தகவல்களை பெற்றோருக்கு தெரிவித்து வருவதாகவும் பள்ளிக்கல்வித் துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிகளை திறந்துசிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் தேவைப்பட்டால் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் அனுமதி பெற்று சிறப்பு வகுப்புநடத்திக் கொள்ளலாம். ஆனால், முழு நாளாக அந்த வகுப்புகள் நடைபெறக் கூடாது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்