ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வெழுத பிட்ஜி மாணவர் 770 பேர் தேர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: ஐஐடி, என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்கள் எதிர்பார்த்த ஜேஇஇ மெயின்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. ஃபிட்ஜி மாணவர்கள் வெற்றி பெறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது இதன் மூலம் மீண்டும் தெரியவந்துள்ளது.

வரும் ஆக. 28-ல் நடைபெறவுள்ள ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கு சென்னை ஃபிட்ஜி மாணவர்கள் 770 பேர் தேர்வாகியுள்ளனர். ஃபிட்ஜி மாணவியான தீக்‌ஷா திவாகர் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

தேசிய அளவில் 10 லட்சம் பேர் எழுதிய இத்தேர்வில் இவர் 53-ம் இடம் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, இந்திய அளவில் முதல் 1,000 ரேங்க்களில் தமிழ்நாடு ஃபிட்ஜி மாணவர்கள் 25 பேர் இடம் பெற்றுள்ளனர்.

முதல் 10 ரேங்க்களில் முதல் மற்றும் 3-ம் ரேங்க்களை ஃபிட்ஜி மாணவர்கள் பெற்றுள்ளனர். 100 ரேங்க்களுக்குள் 21 மாணவர்கள் வந்துள்ளனர். தேசிய அளவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபிட்ஜி மாணவர்கள் ஜேஇஇஅட்வான்ஸுக்கு தேர்வாகியுள்ளனர்.

இது ஃபிட்ஜியின் முறையான கற்பித்தலையும் மாணவர்களின் தளர்வடையாத திறனையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. ஃபிட்ஜி மாணவர்கள் கடின உழைப்பையும், திறனையும் கொடுத்துஇந்த வெற்றியை ஈட்டியுள்ளனர்.

இவ்வாறுஃ பிட்ஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

9 mins ago

தமிழகம்

53 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்