சென்னை: மலேசியாவில் இருந்து விமானம் மூலம் போலி பாஸ்போர்ட்டில் சென்னைக்கு வந்த வங்கதேச பயணி கைது செய்யப்பட்டார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் சென்னைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தது. குடியுரிமை அதிகாரிகள் பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்தனர். அப்போது இந்திய பாஸ்போர்ட்டில் டுலல் சன்ட்ரா (38) என்பவர் வந்தார். அவர் மீது சந்தேகம்அடைந்த அதிகாரிகள், அவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்த போது அது போலியானது என்பது தெரிந்தது. இதையடுத்து, அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும், சிலரிடம் பணம் கொடுத்து இந்திய பாஸ்போர்ட்டை வாங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
26 mins ago
வணிகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
4 hours ago
சினிமா
4 hours ago