கிருஷ்ணகிரி: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீஸார், பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் எஸ்ஐ தென்னரசு மற்றும் போலீஸார், கிருஷ்ணகிரி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலை ஒரப்பம் பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அதிகாலை 5 மணியளவில், அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், 50 கிலோ அளவிலான, 40 மூட்டைகளில் 2000 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. வேனை ஓட்டிவந்த திருப்பத்தூர் மாவட்டம் சின்னபசலிக்குட்டை பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவரைக் கைது செய்து, ரேஷன் அரிசி, சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில், திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கிச் சென்று, கர்நாடகாவில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரிந்தது. இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்டம் ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (27) என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 mins ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
5 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago