வத்தலகுண்டு அருகே தூங்கி கொண்டிருந்த விவசாயி வெட்டிக்கொலை

By செய்திப்பிரிவு

வத்தலகுண்டு: வத்தலக்குண்டு அருகே தூங்கிக் கொண்டிருந்த விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து பட்டிவீரன்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தாண்டிக்குடி மலை அடிவாரத்தில் உள்ள அமைதிப்பூங்கா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சடையாண்டி (55). கிராம காடு வளர்ப்புக் குழு தலைவராக இருந்த இவர், அமைதிப்பூங்காவில் உள்ள கூட்டுவன மேலாண்மை அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சடையாண்டியை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர். காலையில் சடையாண்டி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்த போலீஸார் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்து. பட்டிவீரன்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

19 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்