நாமக்கல்: நாமக்கல்லில், தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை காஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.4.89 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாமக்கல்லில் சேலம் தேசிய நெடுஞ்சாலை பெருமாள் கோயில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். அவருக்கு சொந்தமான கட்டிடத்தில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் செயல்படுகிறது. நேற்று காலை அவ்வழியாகச் சென்றவர்கள் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த புதுச்சத்திரம் காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் மர்ம நபர்கள் நள்ளிரவில் காஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து இயந்திரத்தில் இருந்த ரூ.4.89 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.
மிளகாய் பொடி
மேலும், தடயங்களை மறைக்க மிளகாய் பொடி தூவப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மோப்ப நாய் ஏடிஎம் மையத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்து தலைமறைவான மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
க்ரைம்
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
க்ரைம்
5 hours ago
இந்தியா
5 hours ago
சினிமா
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago