வங்கி ஊழியர்போல பேசி ரிசர்வ் போலீஸிடம் ரூ.1 லட்சம் மோசடி

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காக்கூரைச் சேர்ந்த ராமசாமி மகன் திவாகர்(28). இவர்ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ரிசர்வ் போலீஸாகப் பணிபுரிகிறார்.

இவர் பரமக்குடியில் உள்ள தனியார் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். இவ்வங்கியில் 2 மாதங்களுக்கு முன்பு, கடன் அட்டை பெற்றுவிட்டு, அதைப்பயன்படுத்தாமல் வைத்திருந்தார்.

இந்நிலையில், 11.4.2022 அன்றுதிவாகரின் மொபைலுக்கு தொடர்புகொண்ட பெண் ஒருவர், வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்துபேசுவதாகக்கூறி இந்தியில் பேசியுள்ளார்.

பின்னர் கார்டின் பின்புறம் உள்ள 3 இலக்க எண், மொபைலுக்கு வந்த ஓடிபி எண்ணைக் கேட்டுள்ளார். சில மணி நேரம் கழித்து திவாகரின் கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து 3 முறை ரூ.99,812 எடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து திவாகர் அளித்த புகாரின்பேரில், ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

58 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்