கோவை: துடியலூர் அருகே மகளை விஷம் கொடுத்து கொலை செய்து தாயும் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை அப்பநாயக்கன் பாளையம் பார்க் சிட்டி அவென்யு குடியிருப்பை சேர்ந்தவர் தனலட்சுமி (53). இவரது கணவர் இறந்துவிட்டார். மகன் சசிக்குமார் (34) திருமணமாகி தனியே வசிக்கிறார். மகள் சுகன்யா(32)வுடன் தனலட்சுமி வசித்து வந்தார். சுகன்யா மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனால் அவர் குறித்த கவலை தனலட்சுமிக்கு இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று சுகன்யா வீட்டின் ஹாலில் வாயில் நுரைதள்ளிய நிலையிலும், படுக்கை அறையில் தனலட்சுமி தூக்கிட்டநிலையிலும் இறந்து கிடந்துள்ள னர்.
இதுபற்றி துடியலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், வழக்கு பதிவு செய்து, இருவரது உடல் களையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “கடந்த வாரம் அவர்களது வீட்டுக்கு வந்த குறி சொல்லும் நபர்ஒருவர், சில நாட்களில் தனலட்சுமிக்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விடும் என்றும், குடும்பத்தில் மேலும் பிரச்சினைகள் வரப்போகிறது எனவும் கூறிச் சென்றுள்ளார்.
இதனால் கவலையில் இருந்த தனலட்சுமி மகளுக்கு எலி மருந்தைக் கொடுத்து கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்” என்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
வணிகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
க்ரைம்
7 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
க்ரைம்
7 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago