போலீஸ் உடையில் செயின் பறித்த 5 பேர் கைது

By செய்திப்பிரிவு

சின்னசேலத்தை அடுத்த காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மனைவி அலமேலு (40). இவர் கடந்த 20-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, போலீஸ் உடையில் வந்த 5 பேரை அவரை மிரட்டி 9 பவுன் செயினை பறித்துச் சென்றனர்.

விசாரணையில், விருத்தாசலத்தைச் சேர்ந்த உமாராணி (33), மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த மச்சராஜா (32), தினகரன் (36), உசிலம்பட்டியைச் சேர்ந்த தங்கபாண்டி (30) மற்றும் கணேஷ்குமார் (33) ஆகியோருக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. உமாராணிக்கும், அலமேலுக்கும் இடையே இருந்த தொடர்பு காரணமாக அலமேலு தனிமையில் இருப்பதை அறிந்து கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து 5 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

உலகம்

11 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்