சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 படித்து வரும் மாணவி ஒருவருக்கு, பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக விற்பனைக் குழு செயலாளராக பணிபுரிந்து வந்த ஜெயக்குமார்(46) என்பவர் பாலியல்ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதற்கு மாணவியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.
இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் சேலம் சூரமங்கலம் போலீஸார், இருவர் மீதும் அண்மையில் போக்ஸோ வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து வேளாண்துறை அதிகாரியான ஜெயக்குமார் தலைமறைவானார்.
அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் ஜெயக்குமாரை பணியிடை நீக்கம் செய்து வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக விற்பனைக் குழு இயக்குநர் நடராஜன் அண்மை யில் உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
உலகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago