போக்சோ வழக்கில் தேடப்படும் வேளாண் அதிகாரி சஸ்பெண்ட்

By செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 படித்து வரும் மாணவி ஒருவருக்கு, பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக விற்பனைக் குழு செயலாளராக பணிபுரிந்து வந்த ஜெயக்குமார்(46) என்பவர் பாலியல்ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதற்கு மாணவியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் சேலம் சூரமங்கலம் போலீஸார், இருவர் மீதும் அண்மையில் போக்ஸோ வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து வேளாண்துறை அதிகாரியான ஜெயக்குமார் தலைமறைவானார்.

அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் ஜெயக்குமாரை பணியிடை நீக்கம் செய்து வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக விற்பனைக் குழு இயக்குநர் நடராஜன் அண்மை யில் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்