மதுரையில் 2 மகள்களுடன் தாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். செல்லமாக வளர்த்த நாய்க்குட்டிக்கும் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஒத்தக்கடை அருகிலுள்ள மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் அருண். இவரது மனைவி பெயர் வளர்மதி (39). இவர்களுக்கு அகிலா (20), பிரீத்தி (17) ஆகிய மகள்கள் இருந்தனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அருண் உயிரிழந்தார். தனது மகள்களுடன் வளர்மதி வாழ்க்கையை நகர்த்தி வந்தார். கணவர் இல்லாத சூழலில் மன விரக்தியிலும் இருந்தார்.
இந்நிலையில், இன்று காலை நீண்ட நேரமாக வளர்மதியின் வீடு திறக்காமல் இருந்தது. அக்கம், பக்கத்தினர் தகவல் தெரிவித்து, வளர்மதியின் உறவினர் ஒருவர் வந்து, கதவை திறந்து பார்த்த போது, தாய் , மகள்கள் மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
அவர்கள் வளர்த்த நாய் ஒன்றும் வீட்டுக்குள் இறந்து கிடந்தது. குடும்பத்தோடு தற்கொலை முடிவை எடுத்த வளர்மதி, வீட்டில் வளர்த்த நாயை மட்டும் அனாதையாக்க விரும்பமின்றி அதற்கு விஷம் கொடுத்து கொலை செய்திருக் கலாம் எனத் தெரிகிறது.
இது பற்றி தகவல் அறிந்த ஒத்தக்கடை காவல் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று, மூவரின் உடல் களை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனை யில் அனுப்பினர்.
கணவர் இறந்த துக்கத்தில் இருந்த வளர்மதி, தற்கொலை முடிவெடுத்து முதலில் மகள்கள் தூக்கிட்டு தற்கொலை செய்தபின், தானும் தற்கொலை செய்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஒத்தக்கடை போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
இந்தியா
36 mins ago
தமிழகம்
16 mins ago
இந்தியா
51 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
க்ரைம்
2 hours ago