மதுரையில் 50 ரூபாய்க்காக காவலாளியைக் கொன்ற இளைஞர் கொலை: 8 ஆண்டுளுக்குப் பின், பழிக்குப்பழி சம்பவமா? 

By என்.சன்னாசி

மதுரையில் ரூ.50-க்காக 8 ஆண்டுகளுக்கு முன் காவலாளி ஒருவரைக் கொன்ற இளைஞர் இன்று கொலை செய்யப்பட்டார். இது பழிக்குப்பழி சம்பவமா என, போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை அண்ணாநகர் பகுதியில் வைகை காலனியைச் சேர்ந்த செந்தூர்பாண்டியன் என்பவரின் மகன் ஆனந்தன்( எ) ஓட்டப் பல்லன் (27). இவர் இன்று மாலை சுமார் 6 மணியவில் வண்டியூர் பகுதியிலுள்ள பழனிமுருகன் தியேட்டர் பின் பகுதியில் முட் புதருக்குள் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிந்தது.

தகவல் அறிந்த அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் லில்லி கிரேஸ், காவல் ஆய்வாளர் பூமிநாதன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விசாரணையில், கடந்த 2012ல் அண்ணாநகர் பகுதியிலுள்ள எழில் வீதியில் 50 ரூபாயிக்காக காவலாளி ஒருவரை கொலை செய்தது உள்ளிட்ட அவர் மீது சில வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

எனவே, முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆட்டோவில் சிலர் அவரை அழைத்து வந்து, மது குடிக்க வைத்து போதையில் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், பல்வேறு கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்