ஒரு பவுன் தங்கநகைக்காக புது மணப்பெண் கொலை: விருதுநகரில் சோகம்

By இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வீட்டில் தனியாக இருந்த புது மணப்பெண் ஒருவர் 2 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக எதிர்வீட்டில் வசித்துவந்த இளைஞர் உள்பட 2 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

சிவகாசி அருகே ஆலமரத்துபட்டி ரோடு பெரியார் காலனியைச் சேர்ந்தவர் செல்வமணிகண்டன் (26). பட்டாசு தொழிலாளி. இவருக்கும் திருத்தங்கல் சத்யாநகரைச் சேர்ந்த பிரகதிமோனிகா(24) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில் கடந்த 8-ம் தேதி காலை செல்வமணிகண்டன் வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டார். மதியம் 1.20 மணிக்கு கணவர் செல்வமணிகண்டனிடம் பிரகதிமோனிகா செல்போனில் பேசியுள்ளார்.

மதியம் 2 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்த பிரகதிமோனிகா கழுத்து, கை, கால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

அவர்கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போயியுள்ளது.

திருட்டுக்காக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா என்பது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் மதுரை எஸ்.பி சுஜித்குமார், விருதுநகர் ஏடிஎஸ்பி மாரிராஜன், சிவகாசி டிஎஸ்பி பிரபாகரன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் எதிர்வீட்டில் வசித்து வரும் கோடீஸ்வரன் (20) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்தமற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சேகர் (20) ஆகியோரை கைது செய்தனர்.

நகைக்காக கொலை செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்