மதுபோதையால் விபத்து, மோதலால் ஒரே நாளில் 42 பேர் காயம்; ஒருவர் இறப்பு: சிவகங்கை மருத்துவமனையில் குவிந்ததால் மருத்துவர்கள் சிரமம்

By இ.ஜெகநாதன்

சிவகங்கை பகுதியில் மதுபோதையால் விபத்து, மோதல் போன்ற காரணங்களால் நேற்று ஒரே நாளில் 42 பேர் காயமடைந்தனர். ஒருவர் இறந்தார். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மருத்துவர்கள் சிரமப்பட்டனர்.

கரோனா வைரஸ் தொற்றால் சிவகங்கை மாவட்டத்தில் 12 பேர், ராமநாதபுரம் மாவட்டத்தில் 23 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை தவிர மற்றவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர் குணமடைந்தனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கரோனா வார்டில் தொடர்ந்து 4 நாட்கள் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஒரு வாரமும், தொடர்ந்து ஒரே வாரம் பணிபுரியும் செவிலியர்களுக்கு 2 வாரமும் ஓய்வு அளிக்கப்படுகின்றன.

இதனால் புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு போன்றவற்றிற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் மதுபோதையால் அடிதடி சம்பவங்களால் காயமடைந்த 30 பேர், வாகன விபத்துக்களில் காயமடைந்த 12 பேர் என 42 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.

பெரும்பாலானோர் மாலை, இரவு நேரங்களில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுதவிர மதுபோதையால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் இறந்தார். மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால் பணியில் இருந்த மருத்துவர்கள் சிரமமடைந்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மதுபோதையால் காயமடைந்த ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

26 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்